டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Jan 2022 7:17 PM GMT (Updated: 23 Jan 2022 7:17 PM GMT)

ராதாபுரம் அருகே டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராதாபுரம்:
ராதாபுரம் அருகே டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டிப்ளமோ என்ஜினீயர்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உதயத்தூர் உதயராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். மேளக்கலைஞர். இவருடைய மகன் அரவிந்த் (வயது 19). டிப்ளமோ என்ஜினீயரான இவர் தந்தையுடன் வேலைக்கு சென்று வந்தார்.
முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை மகன் அரவிந்த் கண்டித்தார். இதனால் மனமுடைந்த முருகன் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக ராதாபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்கொலை
இதையடுத்து அரவிந்தை குடும்பத்தினர், உறவினர்கள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அரவிந்த் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ராதாபுரம் போலீசார் விரைந்து சென்று, அரவிந்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story