மணல் கடத்த முயன்ற 4 பேர் கைது


மணல் கடத்த முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2022 7:38 PM GMT (Updated: 23 Jan 2022 7:38 PM GMT)

செங்கோட்டையில் மணல் கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை:
செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செங்கோட்டை அருகே தேன்பொத்தை ராஜபுரம் காலனி ஆற்றுப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளிய, இடைகாலைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 50), பண்பொழியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (38), குத்துக்கல்வலசையைச் சேர்ந்த மகேந்திரன் (29), இசக்கிதுைர (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story