குற்ற வழக்குகளில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது


குற்ற வழக்குகளில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2022 8:54 PM GMT (Updated: 23 Jan 2022 8:54 PM GMT)

குற்ற வழக்குகளில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைப்பாடி மேலத்தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி மலர்(வயது 35), ராஜேந்திரன் மனைவி சுமதி(40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது. 
இதேபோல் கை.களத்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 5 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காரியானூர் மேற்கு தெருவை சேர்ந்த செந்திலின் மகன் திவாகர் (20), வேலு மகன் செல்வகுமார் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story