ஈரோட்டில் சேவல் வைத்து சூதாட்டம்; சிறுவன் உள்பட 8 பேர் கைது


ஈரோட்டில் சேவல் வைத்து சூதாட்டம்; சிறுவன் உள்பட 8 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2022 9:34 PM GMT (Updated: 23 Jan 2022 9:34 PM GMT)

சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 சேவல்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு
சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 சேவல்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டன.
சேவல் வைத்து சூதாட்டம்
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதி 2-ல் சிலர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் சேவல்களுக்கு சண்டை வைத்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
8 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அனைவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகு என்கிற ரகுவரன் (வயது 25), ஜீவா என்கிற காளிதாஸ் (32), சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த காதிவேல் (56), ஈரோடு வளையக்காரவீதி வி.வி.சி. ஆர். நகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (26), காவிரி ரோடு முனியப்ப வீதியை சேர்ந்த குணசீலன் (24), சென்னிமலை தோப்புபாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (23), சூரம்பட்டி சாஸ்திரி சாலை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (27) மற்றும் சூரம்பட்டி அணைக்கட்டு எம்.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 3 சேவல்கள் மற்றும் ரூ.12 ஆயிரத்து 300-யை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story