பரமக்குடி வங்கி முன்னாள் மேலாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு


பரமக்குடி வங்கி முன்னாள் மேலாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 24 Jan 2022 5:07 PM GMT (Updated: 24 Jan 2022 5:07 PM GMT)

வங்கி பயன்பாட்டில் இல்லாத கணக்குகளில் இருந்த ரூ.8 லட்சத்து 9 ஆயிரம் மோசடி செய்த பரமக்குடி வங்கி முன்னாள் மேலாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம், 
வங்கி பயன்பாட்டில் இல்லாத கணக்குகளில் இருந்த ரூ.8 லட்சத்து 9 ஆயிரம் மோசடி செய்த பரமக்குடி வங்கி முன்னாள் மேலாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பயன்பாடு இல்லாத கணக்கு
மதுரை சாம்பக்குளத்தை சேர்ந்தவர் பிரமோத். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஒரு வங்கி கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை மேலாளராக பணிபுரிந்து வந்தார். 
இந்த காலகட்டத்தில் 2021-ம் ஆண்டு மே மாதம்  4-ந்் தேதி முதல், வங்கி கிளையில் மகளிர் மன்றங்களின் பெயரில் ஏற்கனவே இருந்த கணக்குகளில் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளில் வரவு வைத்துள்ளார். 
இந்த பணத்தை அதன் வாடிக்கையாளர்களிடம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டு உள்ளது எனக்கூறி பணத்தை திரும்ப பெற்று ரூ.8 லட்சத்து 9 ஆயிரம் வரை மோசடி செய்து விட்டாராம். 
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திக்கிடம் அந்த வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் ஸ்ரீராம் புகார் செய்தார். அவரின் உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ் பெக்டர் கந்தசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story