மயிலாடுதுறையில், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறையில், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:19 PM GMT (Updated: 24 Jan 2022 5:19 PM GMT)

மயிலாடுதுறையில், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை:-

தஞ்சை அருகே பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில் பாலு, ஒன்றிய தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாணவி மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிட வேண்டும். மாணவி சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகை மாவட்ட தலைவர் கணேசன், விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் சதானந்தம், பா.ஜனதா நிர்வாகிகள் வினோத், சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story