உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி


உளுந்தூர்பேட்டை அருகே  மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி
x
தினத்தந்தி 24 Jan 2022 5:27 PM GMT (Updated: 24 Jan 2022 5:27 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி


உளுந்தூர்பேட்டை

செங்கல்பட்டு மாவட்டம் திருத்தெரி பகுதியை சேர்ந்தவர் தாஸ்(வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். 
நேற்று முன்தினம் தாஸ் திருத்தெரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை வழியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பாலத்தில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கிழே விழுந்த தாஸ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story