வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 பேர் காயம்


வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Jan 2022 6:08 PM GMT (Updated: 24 Jan 2022 6:08 PM GMT)

திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 பேர் காயம் அடைந்தனர்.
மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள சுள்ளாம்பட்டியில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தும் 4-ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. வடமாடு மஞ்சுவிரட்டில் சுமார் 18 காளைகள் பங்கேற்றன. அதில் 16 காளைகள் மட்டுமே போட்டியில் நேரம் குறைவால் கலந்து கொண்டன. 
இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், ரொக்கம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காலையில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். 
11 பேர் காயம்
காளைகளை அடக்கு முயன்றபோது அவை முட்டியதில் 11 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் பொன்னமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வடமாடு போட்டிக்கு, திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுள்ளாம்பட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிர்வாகிகளான செல்வம், ராமு, ராஜ்குமார், ராம்கி, சக்தி, ராமலிங்கம் சுந்தர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story