இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 6:54 PM GMT (Updated: 24 Jan 2022 6:54 PM GMT)

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன.25-
அரியலூர் மாணவி லாவண்யாவின் சாவுக்கு நீதி வேண்டியும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் திருச்சி மரக்கடையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் சுசிலா, பா.ஜ.க.மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணி, மாவட்ட தலைவர் ராஜசேகர், பா.ஜ.க. வர்த்தகர் பிரிவு மாநில செயலாளர் முரளிதரன் சிறப்புரையாற்றினர். இந்துமுன்னணி கோட்ட செயலாளர் போஜராஜன் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story