இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 7:13 PM GMT (Updated: 24 Jan 2022 7:13 PM GMT)

சிவகாசியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி, 
அரியலூர் மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரியும் விருதுநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை சிவகாசி பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பொறுப்பாளர் யுவராஜ், ராஜசேகர், சிவா.வினோத், ஈஸ்வரன், சிவலிங்கம், கண்ணன், பாலசுப்ரமணியன், நாகலிங்கம், வர்த்தக அணி குமரி பாஸ்கரன், குருநாதன், சுகுமார் விஜயராகவன் உள்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 


Next Story