சிவகாசி பகுதியில் இன்று மின்தடை


சிவகாசி பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 24 Jan 2022 7:23 PM GMT (Updated: 24 Jan 2022 7:23 PM GMT)

பராமரிப்பு பணிகளுக்காக சிவகாசி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

சிவகாசி, 
சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி இ.எஸ்.ஐ., சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, மாரியம்மன் நகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், போடு ரெட்டியப்பட்டி, சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி, இ.பி.காலனி, விஸ்வம்நகர், அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார். 

Next Story