ஆரோவில் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு


ஆரோவில் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 4:08 PM GMT (Updated: 25 Jan 2022 4:08 PM GMT)

ஆரோவில் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு


விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் ராமநாதபுரம் வழுதாவூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் மனைவி யுவராணி (வயது 26). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் பணியை முடித்து விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த வாழபட்டாம்பாளையம் சுடுகாடு அருகே செல்லும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென யுவராணியை வழிமறித்து அவர் கழுத்தில் இருந்த 4½ பவுன் நகையை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.  பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
இதுகுறித்து யுவராணி, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story