சேத்தியாத்தோப்பு அருகே கள்ளக்காதலியை பார்க்க சென்ற தொழிலாளி மர்ம சாவு


சேத்தியாத்தோப்பு அருகே கள்ளக்காதலியை பார்க்க சென்ற தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 25 Jan 2022 4:19 PM GMT (Updated: 25 Jan 2022 4:19 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே கள்ளக்காதலியை பார்க்க சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சேத்தியாத்தோப்பு

மர்ம சாவு 

சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் நேற்று காலை 50 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

கள்ளக்காதல் 

விசாரணையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் மேல்வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி வேல்முருகன்(வயது 50) என்பதும், இவருக்கும் கரிவெட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும், நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலியை பார்க்க வந்த வேல்முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து வேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு் அனுப்பி வைக்கப்பட்டது. 

கள்ளக்காதலியிடம் விசாரணை 

உடலில் காயங்கள் இருந்ததால் வேல்முருகன் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே வேல்முருகனின் கள்ளக்காதலி, கள்ளக்காதலியின் கணவர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  வேல்முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story