போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 25 Jan 2022 7:56 PM GMT (Updated: 25 Jan 2022 7:56 PM GMT)

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

விருதுநகர், 
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். 
வாக்காளர் தின நிகழ்ச்சி 
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பிரிவின் மூலம் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 20 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும், வாக்காளர் சுருக்க திருத்த பணிகளில் சிறப்பாக செயலாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
உறுதிமொழி 
தொடர்ந்து  அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலெக்டர் தலைமையில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து கலெக்டர் கலந்துரையாடினார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர்கள் தங்களது வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை எடுக்கும் புதிய கருவியினை கலெக்டர் வாக்காளர்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சப்- கலெக்டர் பிரிதிவிராஜ், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் மாரிச்செல்வி, அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story