குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை


குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Jan 2022 6:46 PM GMT (Updated: 26 Jan 2022 6:46 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 46 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வுநாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன் அனுமதி பெற்று தொழில் நிறுவனம் செயல்படுகிறதா? என்பது குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
46 நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு
இந்த ஆய்வின்போது 28 கடைகளில் ஆய்வு செய்ததில் 16 கடைகளிலும், 48 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 26 உணவு நிறுவனங்களிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 83 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 46 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலினை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. எனவே 46 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story