மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பஸ் சக்கரத்தில் நசுங்கி பலி


மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பஸ் சக்கரத்தில் நசுங்கி பலி
x
தினத்தந்தி 27 Jan 2022 6:08 PM GMT (Updated: 27 Jan 2022 6:08 PM GMT)

திருப்பத்தூாில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பஸ் சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூாில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பஸ் சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்தார்.

குழந்தை பிறந்தது 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். 

இவருடைய மனைவி சுமித்ரா (வயது 40) மகன் திருப்பதி (23). சுமித்ராவின் தம்பி மனைவி சரஸ்வதி (வயது30), சரஸ்வதிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையொட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சரஸ்வதியை அவரது குழந்தையுடன் திருப்பதி மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்து கொண்டிருந்தார். 

சரஸ்வதிக்கு துணையாக இருப்பதற்காக சுமித்ராவும் அதே மோட்டார்சைக்கிளில் பின்புறம் கல்லறைமேடு என்ற இடத்தில் வந்தபோது வாணியம்பாடியில் இருந்து வந்த அரசு டவுன் பஸ் இரு சக்கர வாகனத்தில் பின்பக்கமாக மோதியது.

இதில் திருப்பதி, சரஸ்வதி, அவரது குழந்தை இடது புறமாகவும் சுமித்ரா வலதுபுறமாக விழுந்தனர்.

சக்கரத்தில் நசுங்கி பலி

அப்போது அரசு டவுன் பஸ்சின் பின்சக்கரம் சுமித்ரா தலைமீது ஏறி இறங்கியதில் அவர் அதே இடத்தில் பலியானார். மகன் திருப்பதி, சரஸ்வதி, அவரது குழந்தை படுகாயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story