1,649 பேருக்கு கொரோனா


1,649 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jan 2022 4:45 PM GMT (Updated: 29 Jan 2022 4:45 PM GMT)

1,649 பேருக்கு கொரோனா

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. நேற்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,649 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 19 ஆயிரத்து 297 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,014 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரத்து 380 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,038 ஆக உள்ளது.

Next Story