ஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று


ஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 29 Jan 2022 8:43 PM GMT (Updated: 29 Jan 2022 8:43 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,105 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 265 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் மொத்தம் 17,665 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 1,175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 825 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Next Story