திருப்பத்தூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் 15 சோதனை சாவடிகள் அமைப்பு


திருப்பத்தூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் 15 சோதனை சாவடிகள் அமைப்பு
x
தினத்தந்தி 30 Jan 2022 5:30 PM GMT (Updated: 30 Jan 2022 5:30 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதிகளில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

திருப்பத்தூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதிகளில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சி, 3 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.  தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர் குஷ்வாஹா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

15 சோதனை சாவடிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட 4 நகராட்சிகளுக்கும், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட உள்ளனர். தற்போது தமிழக- ஆந்திர எல்லைப் பகுதி உள்பட 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை சாவடிகளில் 3 போலீசார் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர எல்லைக்குள் எந்தெந்த வாகனங்கள் செல்கிறது. வாகனத்தில் என்ன பொருள்கள் எடுத்துச் செல்கிறார்கள். பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்கிறார்களா என கண்காணிக்கப்படுகிறது. 
மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story