வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 30 Jan 2022 9:00 PM GMT (Updated: 30 Jan 2022 9:00 PM GMT)

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனா்.

வேப்பந்தட்டை:

நகை- பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 30). இவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் குரும்பலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
மீண்டும் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
வலைவீச்சு
இது குறித்து வெங்கடேசன் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, கைரேகைகளை பதிவு செய்து, தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story