அடையாறு ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் உடல்
தினத்தந்தி 31 Jan 2022 10:03 AM GMT (Updated: 31 Jan 2022 10:03 AM GMT)
Text Sizeசென்னை அடையாறு ஆற்றில் நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் கரை ஒதுங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அபிராமபுரம் போலீசார், ஆண் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பிணமாக மீட்கப்பட்டவர், கீழ்ப்பாக்கம் புரிதெருவை சேர்ந்த ரிச்சர்டு வினோத் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு உடலை ஆற்றில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire