வீட்டு தனிமையில் 3120 பேருக்கு சிகிச்சை


வீட்டு தனிமையில் 3120 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 31 Jan 2022 5:59 PM GMT (Updated: 31 Jan 2022 5:59 PM GMT)

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 464 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டு தனிமையில் 3,120 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 464 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டு தனிமையில் 3,120 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பரவல் குறைவு
குமரி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் புதிதாக 464 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 
அதாவது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சோதனை சாவடிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலமாகவும் மொத்தம் 3,143 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மொத்தம் 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 92 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதே போல் அகஸ்தீஸ்வரம் பகுதியில் 58 பேர், கிள்ளியூர்-24, குருந்தன்கோடு-50, மேல்புறம்-30, முன்சிறை-81, ராஜாக்கமங்கலம்-11, திருவட்டார்-49, தோவாளை-34, தக்கலை-30 மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்த ஒருவருக்கும், கேரளாவில் இருந்து வந்த 3 பேருக்கும், சிவகங்கையில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 464 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77 ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது.
வீட்டு தனிமையில் சிகிச்சை
இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
அந்த வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 51 பேரும், கொரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 238 பேரும், வீட்டு தனிமையில் 3,120 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலையை அந்த பகுதி சுகாதார ஆய்வாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

Next Story