தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மையபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருபானந்தன் (வயது 74). தனியார் பஸ்சில் பயணச்சீட்டு பரிசோதகராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.
பின்னர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். ஏலச்சீட்டில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு சரவணன் என்கிற மகனும், சீதாலட்சுமி, ரதி ஆகிய மகள்களும் உள்ளனர்.
அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடன் தொல்லை அதிகமானதால் குடியிருந்த வீட்டை விற்றுள்ளார். அதிலும் கடன் தொகையை முழுமையாக செலுத்த முடியவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருபானந்தன் நேற்று காலை மும்முனி சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் எல்லப்பன், யோகானந்தம் ஆகியோர், தற்கொலை செய்து கொண்ட கிருபானந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story