தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 March 2022 7:26 PM GMT (Updated: 28 March 2022 7:26 PM GMT)

செங்கோட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள புளியரை கோட்டை தெருவை சேர்ந்த ஆதிமூலம் மகன் மாரிசெல்வம் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவருக்கு தீபிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாரிசெல்வத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வேலை முடிந்ததும் மது அருந்தி விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த மாரிசெல்வம் நள்ளிரவில் வீட்டு சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய்காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story