வீடு புகுந்து பணம் திருட்டு


வீடு புகுந்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 2 April 2022 8:20 PM GMT (Updated: 2 April 2022 8:20 PM GMT)

வீட்டில் புகுந்து பணம் திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

திசையன்விளை:

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி பாய் (வயது 58). கிறிஸ்தவ பெண் போதகரான இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மருதநாச்சிவிளையில் உள்ள கிறிஸ்தவ சபையில் பணியாற்றினார். கிறிஸ்தவ சபை அருகில் உள்ள வீட்டில் தங்கினார். 

சம்பவத்தன்று இரவில் டெய்சி பாய் கிறிஸ்தவ சபைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக அவரது வீட்டுக்குள் புகுந்து, அங்கு மேஜையில் இருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பணத்தை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story