வேளாண் பொருட்கள் ரூ.77 லட்சத்திற்கு ஏலம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 12 April 2022 6:43 PM GMT (Updated: 12 April 2022 6:43 PM GMT)

சாலைப்புதூர் ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.77 லட்சத்திற்கு ஏலம் போனது.

நொய்யல், 
விற்பனை கூடம்
நொய்யல் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். 
அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்  15.57 குவிண்டால் எடை கொண்ட 50 ஆயிரத்து 87 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.31.49-க்கும், குறைந்த விலையாக ரூ.26.50-க்கும், சராசரி விலையாக ரூ.20.15-க்கும் என்று ரூ.46ஆயிரத்து 822-க்கு விற்பனை ஆனது.
ரூ.77 லட்சத்துக்கு ஏலம்
அதேபோல் 346.07குவிண்டால் எடை கொண்ட 175மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.89.69க்கும், குறைந்த விலையாக ரூ.86.59க்கும், சராசரி விலையாக ரூ.88.99-க்கும் மற்றும் இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.88.99-க்கும், குறைந்த விலையாக ரூ.78.15-க்கும், சராசரி விலையாக ரூ.85.99க்கும் என்று ரூ.30 லட்சத்து 4 ஆயிரத்து 187-க்கு விற்பனை ஆனது. 
394.20குவிண்டால் எடை கொண்ட 527மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.132.49-க்கும், குறைந்த விலையாக ரூ.115.69-க்கும், சராசரி விலையாக ரூ.121.99-க் கும் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.125.09-க்கும், குறைந்த விலையாக ரூ.116.99ம், சராசரி விலையாக ரூ.129.99-க்கும் என்று ரூ.46லட்சத்து 62ஆயிரத்து 774க்கும் என தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்தமாக ரூ.77 லட்சத்து 13  ஆயிரத்து 789 க்கு விற்பனை ஆனது.







Next Story