விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 13 April 2022 5:35 PM GMT (Updated: 13 April 2022 5:35 PM GMT)

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்

குடவாசல்
குடவாசல் அருகே உள்ள தேதிபுறம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 68). இவரது மகன் கலைச்செல்வன். இவர் தனது குழந்தைக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது ஜெயராமன், கலைச்செல்வனிடம் பிறந்த நாளுக்கு எதற்காக இவ்வளவு செலவு செய்தாய், குறைவாக செலவு செய்திருக்கலாமே என்று கேட்டுள்ளார். இதனால், தந்தைக்கும்-மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெயராமன், விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெயராமன் உயிரிழந்தார். இதுகுறித்து குடவாசல் போலீசில் கலைச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story