சங்கராபுரத்தில் விழிப்புணர்வு பயிற்சி


சங்கராபுரத்தில் விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 13 April 2022 6:38 PM GMT (Updated: 13 April 2022 6:38 PM GMT)

சங்கராபுரம் தனியார் பள்ளியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

சங்கராபுரம், 

சங்கராபுரம் தனியார் பள்ளியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர்கள் சீனிவாசன், தண்டபாணி, காமராஜ், வெங்கடேசன், வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் குப்புசாமி வரவேற்றார். 

இதில் இளைஞர்களை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருட்களின் தாக்கம், ஆரோக்கிய வாழ்விற்கான வாழ்க்கைத்திறன்கள், போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டியதன் அவசியம் என்பன உள்பட பல்வேறு தலைப்புகளில் முதுநிலை ஆசிரியர் சுதா, பட்டதாரி ஆசிரியர்கள் சத்யமூர்த்தி, ஸ்டாலின் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மலர்கொடி, சரசு, புவனேஸ்வரி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story