தொடர் விடுமுறை காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்.


தொடர் விடுமுறை காரணமாக  ஈரோடு பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்.
x
தினத்தந்தி 13 April 2022 8:53 PM GMT (Updated: 13 April 2022 8:53 PM GMT)

தொடர் விடுமுறை காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனா்.

தமிழ் புத்தாண்டு இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி ஆகும். இதைத்தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை ஆகும்.
இதன் காரணமாக ஈரோட்டில் தங்கி வேலை பார்க்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள கல்லூரிகளில் தங்கி படிக்கும் மாணவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் நேற்று பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story