ஹெல்மெட் அணிவது குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 14 April 2022 6:10 PM GMT (Updated: 14 April 2022 6:10 PM GMT)

ஹெல்மெட் அணிவது குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நொய்யல், 
புகழூர் வருவாய் வட்டம் சார்பில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது குறித்துமோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. புகழூர் தாசில்தார் மதிவாணன் ஊர்வலத்தை ெதாடங்கி வைத்தார். மண்டல துணை தாசில்தார் அன்பழகன் முன்னிலை வகித்தார்.  தலைமையிடத்து துணை தாசில்தார் கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார். புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி, வருவாய் ஆய்வாளர்கள் ரஹமத்துல்லா, முருகேசன், சத்யா, போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story