தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 16 April 2022 5:52 PM GMT (Updated: 16 April 2022 5:52 PM GMT)

பென்னாகரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா காலப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் செந்தமிழ் (வயது 22). இவர் ஓசூரில் பாகலூர் சாலையில் ஸ்ரீ நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தனது தந்தையிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது வாங்கி தர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செந்தமிழ், விஷத்தை குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தமிழ் இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story