மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தென்காசியில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி:
பசுமை வலசை இயக்கம் மற்றும் தென்காசி காவல்துறை சார்பில் தென்காசியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து தொடங்கியது. இதனை தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த போட்டி குத்துக்கல்வலசை வழியாக சென்று கணக்கப்பிள்ளை வலசையில் முடிவடைந்தது.
பெண்களுக்கான போட்டி குத்துக்கல்வலசையில் தொடங்கி கணக்கப்பிள்ளையில் முடிவடைந்தது. மொத்தம் இந்த போட்டியில் 1865 பேர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்காசி நகரசபை தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ், சமூக ஆர்வலர் ரமேஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story