பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா


பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 18 April 2022 6:50 PM GMT (Updated: 18 April 2022 6:50 PM GMT)

பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

காரையூர்:
காரையூர் சுற்றுவட்டார பகுதியில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். அனைவரும் ஒன்று கூடி நடைபெறும் மீன்பிடி திருவிழா கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாகவும், போதிய நீரின்றி காரணத்தாலும் சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்று மேலத்தானியம் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சூரப்பட்டி, அம்மாபட்டி, எம்.உசிலம்பட்டி, ஒலியமங்கலம், சடையம்பட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, காரையூர், பொன்னமராவதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். அதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. மீன்களை பிடித்த கிராமமக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Next Story