ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை யானை


ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை யானை
x

ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் ஒற்றை யானை உலா வந்தது.

தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கோைட வெப்பம் கொளுத்தி வருவதால், தண்ணீரை தேடி வனப்பகுதி வழியாக செல்லும் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாைலக்கு யானைகள் வந்துவிடுகின்றன. சில நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஆசனூர் அருகே காரப்பள்ளம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்றது. சுமார் 15 நிமிடம் ரோட்டிலேயே உலா வந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார்கள். யானை தானாக காட்டுக்குள் சென்ற பிறகே போக்குவரத்து தொடர்ந்தது.

Next Story