தீ தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி


தீ தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 April 2022 8:07 PM GMT (Updated: 20 April 2022 8:07 PM GMT)

சங்கராபுரத்தில் தீ தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கராபுரம், 

சங்கராபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீ தொண்டு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) ரமேஷ்குமார்  முன்னிலை வகித்தார். 

தீயணைப்பு நிலைய முன்னணி வீரர்கள் சாமிபிள்ளை, ராமமூர்த்தி, ரகு உள்ளிட்டோர் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதை தடுக்க வேண்டிய முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

மேலும், சமையல் கியாஸ் சிலிண்டர் அடுப்பு தீப்பற்றினாலோ, கியாஸ் கசிவு ஏற்பட்டாலோ எவ்வாறு  பாதுகாப்பது என்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

Next Story