இந்து மகாசபா மாநில தலைவருக்கு கொலை மிரட்டல் ;எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது


இந்து மகாசபா மாநில தலைவருக்கு கொலை மிரட்டல் ;எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
x
தினத்தந்தி 22 April 2022 9:22 PM GMT (Updated: 22 April 2022 9:22 PM GMT)

இந்து மகாசபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

ஈத்தாமொழி, 
இந்து மகாசபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
இந்து மகாசபா தலைவர்
ஈத்தாமொழி அருகே உள்ள தோப்பன் குடியிருப்பை சேர்ந்தவர் த.பாலசுப்பிரமணியன் (வயது 58). இவர் இந்து மகா சபாவின் மாநில தலைவராக உள்ளார். 
இவர் சம்பவத்தன்று ஈத்தாமொழி சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காற்றாடித்தட்டு பகுதியை சேர்ந்த ஜாண் ரோஸ் மகன் இன்பன்ட் ஜெகதீஷ் (36) என்பவர் வந்தார். அவர் த.பாலசுப்பிரமணியனை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
கைது
இதுபற்றி த.பாலசுப்பிரமணியன் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து சுவாமி வழக்கு பதிவு செய்து இன்பன்ட் ஜெகதீசனை கைது செய்தார்.
இன்பன்ட் ஜெகதீஷ் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வருகிறார். 
இவர் மீது ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்பட 3 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story