சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 25 April 2022 8:21 PM GMT (Updated: 25 April 2022 8:21 PM GMT)

சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே நெட்டூர் சுகாதார ஆய்வாளராக இருப்பவர் கங்காதரன். இவர் ஆலங்குளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆலங்குளம் அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் முத்துக்குட்டி (வயது 45) என்பவர் அலுவலகத்திற்கு வந்து, கங்காதரனை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து கங்காதரன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குட்டியை கைது செய்து, ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story