ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 26 April 2022 6:33 PM GMT (Updated: 26 April 2022 6:33 PM GMT)

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29-ந்தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை

 ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 29-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 

இந்த வேலைவாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பணி நியமன ஆணை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story