கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 6:01 PM GMT (Updated: 29 April 2022 6:01 PM GMT)

அரக்கோணம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம்

அரக்கோணம் அருகே சாலை கிராமம் பகுதியில் கஞ்சா விற்பதாக தாலுகா போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது பெட்ரோல் பங்க் அருகே மறைவாக நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் சாலை கைலாசபுரம் பகுதியை சேர்ந்த செந்தமிழ்அரசன் (வயது 24) என்பதும் கஞ்சா விற்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story