ரம்ஜான் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


ரம்ஜான் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 30 April 2022 5:04 PM GMT (Updated: 30 April 2022 5:04 PM GMT)

ரம்ஜான் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


கண்டாச்சிமங்கலம்

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை வருகிற 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சந்தைகளில் முஸ்லிம்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் பலர் ஆடுகளை வாங்கி வருவதை காண முடிகிறது. அந்த வகையில் தியாகதுருகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று இங்கு தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவற்றை  உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். 

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் ரம்ஜான் பண்டிகை வருவதால் கூடுதல் விலைக்கு விற்கலாம் என கருதி விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சந்தையில் ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.19,500 வரை விலைபோனது. அதேபோல் ஆட்டுக்குட்டி ஒன்று குறைந்த பட்சம் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.7 ஆயிரம் வரை விலைபோனது. ரம்ஜான் பண்டிகையையொட்டி சந்தைக்கு கூடுதல் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் சுமார் ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என்றார். 

Next Story