கார் மோதி படுகாயம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் சாவு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 4 May 2022 6:39 PM GMT (Updated: 4 May 2022 6:39 PM GMT)

கார் மோதி படுகாயம் அடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் பரிதாபமாக இறந்தார்.

க.பரமத்தி, 
க.பரமத்தி அருகே உள்ள பவுத்திரம் என்ற இடத்தில் கடந்த மாதம் 18-ந்தேதி தேதி 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் ரோட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2-ந் தேதி இறந்தார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Related Tags :
Next Story