கொழுந்தியாளுடனான கள்ளக்காதலை கண்டித்த மனைவி படுகொலை


கொழுந்தியாளுடனான கள்ளக்காதலை கண்டித்த மனைவி படுகொலை
x
தினத்தந்தி 4 May 2022 8:17 PM GMT (Updated: 4 May 2022 8:17 PM GMT)

கொழுந்தியாள் உடனான கள்ளக்காதலை கண்டித்த மனைவியை வாலிபர் ஒருவர் படுகொலை செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சவுடேஸ். இவரது மனைவி ஸ்வேதா(வயது 30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மதுபான விடுதியில் காசாளராக சவுடேஸ் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 

அப்போது ஆத்திரமடைந்த சவுடேஸ், ஸ்வேதாவை அடித்து உதைத்து தாக்கியதுடன், துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் உடல்நலக்குறைவால் ஸ்வேதா இறந்துவிட்டதாக கூறி அவர் நாடகம் ஆடினார். இதுகுறித்து நெலமங்களா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சவுடேசை கைது செய்துள்ளனர். விசாரணையில் ஸ்வேதாவின் தங்கையுடன் சவுடேஸ் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.

 இதுபற்றி அறிந்த ஸ்வேதா தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் இரவு ஸ்வேதாவின் கழுத்தை இறுக்கி சவுடேஸ் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான சவுடேசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story