கடலூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுமி சாவு


கடலூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுமி சாவு
x
தினத்தந்தி 9 May 2022 4:33 PM GMT (Updated: 9 May 2022 4:33 PM GMT)

கடலூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுமி சாவு

நெல்லிக்குப்பம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பெரியகுப்பத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களது மகள் அஸ்வந்தினி (வயது 1½). கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு ஏரிக்கரை ஓரமாக அஸ்வந்தினி விளையாடி கொண்டிருந்தாள்.
 அப்போது குழந்தை அஸ்வந்தினி எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கனிமொழி தனது மகள் அஸ்வந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், அஸ்வந்தினி ஏற்னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Related Tags :
Next Story