கலவை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை


கலவை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2022 5:20 PM GMT (Updated: 9 May 2022 5:20 PM GMT)

கலவை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 75). இவர் பென்னகர் மந்தைவெளியில் பெட்டிக் கடை வைத்திருந்தார். கடந்த 3 மாதமாக உடல் நலம்பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வாந்தி எடுத்துள்ளார். 

உடனே அவரை செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து வாழைபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story