பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது


பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 9 May 2022 9:33 PM GMT (Updated: 9 May 2022 9:33 PM GMT)

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

அரியலூர்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவ-மாணவிகள் அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். இன்று தமிழ் தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை 87 பள்ளிகளை சேர்ந்த 4,660 மாணவர்களும், 4,831 மாணவிகளும் என மொத்தம் 9,491 மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனர். இதற்காக 39 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story