போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 May 2022 5:50 PM GMT (Updated: 10 May 2022 5:50 PM GMT)

போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை 
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக ஞானசேகரன் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல கடைக்கு வந்தார்.
அப்போது கடையின் முன்புற ஷட்டரில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பாரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மதுபாட்டில்கள் தப்பின 
அப்போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக அங்கு வந்ததும், டாஸ்மாக் கடையின் ஷட்டரில் இருந்த 3 பூட்டுகளை வெல்டிங் மெஷின் வைத்து உடைத்தும் உள்ளனர். பின்னர் அவர்கள் ஷட்டரை உடைக்க முயன்றும் முடியாததால் அப்படியே விட்டு சென்றதும் தெரிய வந்தது.
டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைக்க முடியாததால் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தப்பின. இது தொடர்பாக பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story