காரிமங்கலம் அருகே கைக்குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்


காரிமங்கலம் அருகே கைக்குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்
x
தினத்தந்தி 10 May 2022 5:52 PM GMT (Updated: 10 May 2022 5:52 PM GMT)

காரிமங்கலம் அருகே கைக்குழந்தையுடன் பெண் மாயமானது தொடர்பாக கணவர் போலீசில் புகார் செய்தார்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள ஏ.சப்பானிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லாவண்யா (வயது24). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். லாவண்யா போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை ெசய்து வருகிறார். கடந்த 6-ந் தேதி பணிக்கு செல்வதாக கூறி கைக்குழந்தையுடன் சென்ற லாவண்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவிலலை. இதுகுறித்து சேகர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தாய் மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.

Next Story