தர்மபுரியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 5:52 PM GMT (Updated: 10 May 2022 5:52 PM GMT)

தர்மபுரியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார், மாநில துணைத்தலைவர் கருணாநிதி, நிர்வாகிகள் சரவணன், பாக்யராஜ், கலைவாணன், முருகன், கவிதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story