விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை


விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 6:51 PM GMT (Updated: 10 May 2022 6:51 PM GMT)

குடவாசல் அருகே விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

குடவாசல்;
குடவாசல் அருகே உள்ள வடவேர் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகள் அட்சயா(வயது16). .இவர் குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அட்சயா வீட்டில் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  அட்சயா இறந்தார். இது குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story