நூதன முறையில் ஆர்ப்பாட்டம்


நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 6:53 PM GMT (Updated: 10 May 2022 6:53 PM GMT)

அருப்புக்கோட்டையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
ஆதிதிராவிட நலத்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13 சமையலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆதிதிராவிட துறை ஊழியர் சங்கம் சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் செல்வின் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் ராமர், அருப்புக்கோட்டை தலைவர் முருகதாஸ், பொதுச்செயலாளர் பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story